Advertisment

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு; அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

author-image
WebDesk
New Update
communist leader sankaraiah to receive thagaisal thamizhar award, tamil nadu govt announces thagaisal thamizhar award to n sankaraiah, சங்கரய்யா, தகைசால் தமிழர் விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா, சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தகைசால் தமிழர் விருது தொகை 10 லட்சத்தை தமிழக அரசுக்கே அளித்தார் சங்கரய்யா, marxist communist pary senior leader sankaraiha, cpim senior leader n sankaraiah, sankaraiah returns award amount rs 10 lakhs to tn govt, sankaraiah centenary celebration, tamil nadu govt honours sankaraiah

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு; அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி; தொண்டர்கள் சோகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

102 வயதான சங்கரய்யா 80 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருந்து வருகிறார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் தொடங்கிய போது அதில் பங்கு வகித்த 36 பேரில் ஒருவர். சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் என பலருடனும் நேரடி தொடர்பு கொண்டவர். சமீபத்தில் தமிழ்நாடு அரசு சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது. சங்கரய்யா, முதுமை காரணமாக கட்சி பணிகளில் இருந்து சில ஆண்டுகளாக விலகி உள்ளார்.

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாகப் பேசினர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சங்கரய்யா சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cpm Sankaraiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment