Advertisment

மார்க்சிஸ்ட் புதிய மாநிலச் செயலாளர் தேர்வு: யார் இந்த பெ. சண்முகம்?

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சி.பி.எம் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளரை பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
P Shanmugam 1

சி.பி.எம் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளரை பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சி.பி.எம் 24-வது மாநில மாநாட்டில், பேசிய மாநிலச் செயலாலர் கே. பாலகிருஷ்ணன், தனக்கு 72 வயதாகிறது, அதனால், பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையடுத்து, புதிய மாநிலச் செயலாளரை பெ. சண்முகம் புதிய மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.எம்) 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சி.பி.எம் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், பா.ஜ.க தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-சும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். 

சி.பி.எம் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைப்பு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால் தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கே. பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு சி.பி.எம் மாநாட்டில் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சி.எம்.எம் மாநாட்டில் மாநில செயற்குழு மற்றும் தேர்வுக்குழு மூலம் சி.பி.எம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பெ. சண்முகம் பெ. மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Advertisment
Advertisement

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சி.பி.எம்-ன் 24வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெ. சண்முகம் யார், இதற்கு முன்பு அவர் என்ன பொறுப்பு வகித்தார். அவருடை பின்னணி குறித்து பார்ப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த பெ. சண்முகம் மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மாணவராக இருந்தபோதே, சி.பி.எம்-ன் மாணவர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில சங்க செயலாளராகவும் அகில இந்திய மாணவர் சங்க நிர்வாகியாகவும் செயல்பட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகி விவசாய சங்கத்தின் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக மிக கடுமையான பணிகளை ஆற்றியவர், போராட்டங்களை நடத்தியவர். வாச்சாத்தி வழக்கை முன்னின்று நடத்தியவர். மாநில செயற்குழுவில் உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெ. சண்முகத்துக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment