கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் எஸ்3 பெட்டியில் விரிசல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ரயில் செங்கோட்டையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, விரிசல் காணப்பட்ட ரயில் பெட்டி, கழற்றிவிடப்பட்டது. இந்த ரயில் பெட்டியில் விரிசலானது அடிவாரத்தில் காணப்பட்டது.
இதையடுத்து மற்றொரு பெட்டி மதுரையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் சென்னை நோக்கி பயணத்தை தொடர்ந்தது. கேரளத்தில் இருந்து சென்னை சென்ற பெட்டியில் விரிசல் காணப்பட்டது பயணிகள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“