/indian-express-tamil/media/media_files/2024/11/01/K5o8WJGv8G7Eh7QBCPvj.jpg)
தீபாவளி பண்டிகை எதிரொலியாக நேற்றைய தினம் அதிகளவில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தீபாவளி பண்டிகை அனைத்து பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
அதன்படி, கோவை மாவட்டத்திலும் ஏராளமான பொதுமக்கள் தீபாவளியை விமரிசையாக கொண்டாடினர். அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், நகரின் பல இடங்களில் காகிதங்கள் உள்ளிட்ட பட்டாசு கழிவுகள் சேர்ந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை முதல் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், குப்பைகளை விரைந்து அகற்றுவதில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.