தீபாவளி பண்டிகை எதிரொலியாக நேற்றைய தினம் அதிகளவில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தீபாவளி பண்டிகை அனைத்து பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/01/ogum41U0tnqm9px6vh5d.jpg)
அதன்படி, கோவை மாவட்டத்திலும் ஏராளமான பொதுமக்கள் தீபாவளியை விமரிசையாக கொண்டாடினர். அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், நகரின் பல இடங்களில் காகிதங்கள் உள்ளிட்ட பட்டாசு கழிவுகள் சேர்ந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/01/WiJxvOWStcKDMyhVH2wl.jpg)
காலை முதல் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், குப்பைகளை விரைந்து அகற்றுவதில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.