/indian-express-tamil/media/media_files/tYb7ZFY9fmwzCFLSfe4M.jpg)
நாடு முழுவதும் நேற்று (நவ.13) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
அப்போது அவரது 4-வயது மகள் நவீஸ்கா தனது பெரியப்பா விக்னேஷனுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பலத்த சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது. இதில் சிறுமி நவீஸ்கா பலத்த தீக்காயம் அடைந்தார். விக்னேஷின் கை விரல் துண்டானது. அவர்களது வீட்டிலும் தீ பற்றியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வெடி விபத்து சம்பவத்தில் சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.