தசைநார் சிதைவு நோய்: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி; தன்னார்வ அமைப்பு புது முயற்சி

தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் "டர்ஃப்" கிரிக்கெட் போட்டி நடத்தி சிகிச்சைக்காக நிதி சேகரித்தனர்.

தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் "டர்ஃப்" கிரிக்கெட் போட்டி நடத்தி சிகிச்சைக்காக நிதி சேகரித்தனர்.

author-image
WebDesk
New Update
cric it.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகெங்கும் தசைநார் சிதைவு எனப்படும் மரபணு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படும்  குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Advertisment

தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க 5 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க பெரும் பொருட்செலவாகும் என்ற நிலையில் அரசின் கவனத்துக்கு செல்லும் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சைக்கான மருந்துகள் வரிச்சலுகையுடன் மலிவு விலையில் மருந்துகள் கிடைத்து வருகின்றன. 

மேலும் தன்னார்வ அமைப்புகள் மூலம் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

இந்த நிலையில் தசை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆப் இன்ஃப்ரா என்ற தன்னார்வ அமைப்பு டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை சிகிச்சைக்கு வழங்க முடிவெடுத்தனர். 

அதன்படி கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிறன்று நடைபெற்றது. 

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.  

இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப்  இன்ஃப்ரா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் காமராஜ் கூறுகையில், தசைநார் நோய் சிதைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் நிதி திரட்டுவதற்காக இந்த கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம். 

இதில் கிடைக்கும் நிதியை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை மற்றும் வாழ்வை மேம்படுத்த முழுமையாக வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: