தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: காவல் துறை பகீர் தகவல்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crimes-against-women

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காவல் துறை

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;

Advertisment

தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளை காட்டிலும் 2024-ம் ஆண்டில் குறைந்து உள்ளது. 2022-ல் ஆயிரத்து 597 கொலைகளும், 2023-ல் ஆயிரத்து 958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் ஆயிரத்து 488ஆக குறைந்துள்ளது. குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன.

அதேவேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் 3 ஆயிரத்து 84 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 2024-ல் 3 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் ஆயிரத்து 885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023-ல் 406ஆக பதிவாகிய நிலையில், 2024-ல் 471ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024-ம் ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. 2022-ல் 4 ஆயிரத்து 968 போக்சோ வழக்குகளும், 2023-ல் 4 ஆயிரத்து 581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த 2024-ம் ஆண்டில், 6 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: