/indian-express-tamil/media/media_files/xbimxooX5LE8R1kL74v0.jpg)
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது.
வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று வேலூர் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்து இருந்த நிலையில், உடனடியாக வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுத்தியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, மாவட்டங்களீள் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்பு குறித்து கடிதம் எழுதி, ரூ. 30 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டார். ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.