'விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது.. அது தனக்கும் பொருந்தும்': கமல் பேச்சு

நடிகர் விஜய்க்கு திரளும் கூட்டங்கள் அனைத்தும் ஓட்டுகளாக மாறாது என்றும், இது தனக்கும் பொருந்தும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு திரளும் கூட்டங்கள் அனைத்தும் ஓட்டுகளாக மாறாது என்றும், இது தனக்கும் பொருந்தும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kamal vijay

'விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது.. அது தனக்கும் பொருந்தும்': கமல் பேச்சு

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்றது. இன்று விழுப்புரம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Advertisment

மோகன்லால்-க்கு தாதா சாகேப் பால்கே விருது: மோகன்லால்-க்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன், தனக்கு விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்கப்படக் கூடாது என்றும், பல திறமையான கலைஞர்கள் அந்த வரிசையில் நிற்க வேண்டும் என்றும் கூறினார்.

நடிகர் விஜய் பற்றி: ரசிகர் கூட்டம்: நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது. இது விஜய்க்கு மட்டுமல்ல, எனக்கும், இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்" என்று கூறினார்.

மக்களுக்குச் சேவை செய்ய அரசியல் வரும் நடிகர்களை, பொதுமக்கள் இன்னும் அரசியல்வாதியாகப் பார்க்காமல் சினிமா நடிகராகவே பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு, "என்னை ஏன் ரசிகர்கள் தேடி வந்தார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்றார். விஜய்க்கு என்ன ஆலோசனை வழங்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காகச் செய்யுங்கள்" என்று கூறினார். மேலும், "எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை வைப்போம் என்று மக்கள் சொல்வார்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோளும்" என்று தெரிவித்தார்.

Advertisment
Advertisements

திமுக கூட்டணி மற்றும் தேர்தல்: திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கேட்பது குறித்த கேள்விக்கு, "எங்களுடைய எதிர்பார்ப்பை உங்களிடம் கூறுவேனா?" என்று பதிலளித்தார். திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அந்தக் கட்சி கண்ணியமாக நடப்பதாகவும் அவர் கூறினார். "எங்கள் தகுதியை நிரூபித்துக் கொண்டு இதற்கு ஏற்றவாறு தொகுதி கொடுங்கள் எனக் கேட்பதுதான் நியாயமாக இருக்கும்" என்றும் தெரிவித்தார். "எத்தனை கட்சிகள் வந்தாலும், எந்தத் தலைவர்கள் வந்தாலும் மக்கள் வெளியே வர வேண்டும். உங்கள் வாழ்க்கையை குத்தகைக்கு விட்டுவிட வேண்டாம்" என்றும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Vijay Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: