/indian-express-tamil/media/media_files/m9PkSPqvGjHlxwx9cJsr.jpg)
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 6ல் வென்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 6ல் வென்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் (MTC) இணைந்து தற்போதுள்ள பிளாஸ்டிக் விசில்களுக்குப் பதிலாக, நகரைச் சுற்றியுள்ள பேருந்து நடத்துனர்களுக்கு 8,000 மெட்டல் விசில்களை வழங்க உள்ளது. இதுகுறித்து சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ் விஸ்வநாதன் கூறுகையில், “விசில் எப்போதும் சி.எஸ்.கே மற்றும் சென்னையுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது. மெட்டல் விசில்கள் நீண்ட காலம் நீடிக்கும். இது பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்.
சென்னை அணி ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் போது ரசிகர்களின் வசதியை மேம்படுத்துவதற்காக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து, போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கு வழி வகை செய்துள்ளது. பயணச்சீட்டுகள் உள்ள ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்கு முன் மூன்று மணி நேரம் சென்னை பெருநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.