கடலூர் எஸ் புதூர் சேர்ந்தவர் தேவேந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் தனக்கு அஜித்குமார், அருண்குமார் இரண்டு மகன்கள் உள்ளனர் எனவும், தனது மூத்த மகன் அஜித்குமார் என்பவருடன் திருப்பாதிரிப்புலிபூர் முத்தையா நகரை சேர்ந்த பாஸ்கரன் என்பவருடை மகன் கோகுல் என்பவர் ஒன்றாக படித்தவர்.
கோகுல் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மகன் அஜித்குமாரிடம் போன் செய்து, எனது அப்பா பாஸ்கரன் மூலம் தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் OA வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்,
அந்த வேலையை தனது மகன் மறுத்துவிட்டதால், தன்னை தொடர்பு கொண்ட பாஸ்கர் உங்கள் மகனுக்கு அரசாங்க வேலை வாங்கித்தருகிறோம். நான் ரயில்வே துறையில் உயர்ந்த பதவியில் உள்ளதாகவும் தனது மனைவி அனுசுயாவுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளவர்களை நன்கு தெரியும் அதனால்
என்னை நம்பி வேலைக்கு பணம் கொடுக்கலாம் என கேட்டுள்ளனர்.
கோகுலுக்கும் அரசு வேலை வாங்குவதற்காக பணம் ரூபாய் 6 லட்சம் கட்டியுள்ளதாகவும் கூறினார். அவர்
கூறியதை நம்பி மகன்களின் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் கடன் வாங்கி பாஸ்கரனிடம் தனது மகன்களின் அரசு வேலைக்காக இரண்டு தவணையாக ரூபாய் 6 லட்சம் பணத்தை பாஸ்கரன் வீட்டில் வைத்து கொடுத்துள்ளனர் .
அதன்பிறகு இந்த விஷயத்தை தனது மகன்களிடமும், தனது வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் சில மாதங்கள் ஆகியும் தனது மகனுக்கு வேலை வாங்கி தராததால், பாஸ்கரனை தொடர்பு கொண்டு கேட்டபோது
வேலை கண்டிப்பாக வந்துவிடும், இல்லையென்றால் ஒரு மாதத்தில் பணத்தை தந்துவிடுகிறோம் என்று கூறினார்,
தான் கடன் வாங்கி கொடுத்த இடத்தில் மிகுந்ததொந்தரவுக்கு ஆளாகி தனது மகனுடன் பாஸ்கரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது ரூபாய் 1 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்தார், பாக்கி பணத்தை 2 மாதத்தில் கொடுத்து விடுவதாக கூறினார், பின்னர் சில நாட்கள் கழித்து பாஸ்கர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது
தன்னை போன்று குணசேகர் என்பவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 14 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதை அறிந்துள்ளார்.
அவர் பணத்தை திரும்ப கேட்டபோது ரூபாய் 1.5 லட்சம் திருப்பி கொடுத்துள்ளார். தன்னிடம் 5 லட்சம், குணசேகர் என்பவரிடம் 12.5 லட்சம் மொத்தம் 17.5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது,
எங்களுக்கு தரவேண்டிய ரூபாய் 5 லட்சம் பணத்தை பாஸ்கரனிடம் கேட்டபோது, பணத்தை கொடுக்க முடியாது, நான் ரயில்வேயில் பெரிய பதவியில் உள்ளதாகவும், தனது மனைவிக்கு கலெக்டர் ஆபிசில் எல்லாரையும் தெரியும், அதனால் எங்கள ஒன்னும் பண்ணமுடியாது.
நீ எங்க வேண்டுமானாலும் போய் புகார் கொடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். மனு சம்பந்தமாக கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பாஸ்கரன், அனுசுயா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.