கடலூர் மாணவி மரணம்: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இடமாற்றம்

கடலூர் மாவட்டம் கீழ்அழிஞ்சிபட்டு அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் கீழ்அழிஞ்சிபட்டு அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Cuddalore 2nd class school student dies 2 teachers transferred Tamil News

கடலூர் அருகே பள்ளிக்குச் சென்ற இரண்டாம் வகுப்பு மாணவி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ள கீழ்அழிஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 7) கீழ்அழிஞ்சிபட்டு  ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் .

Advertisment

கூலி வேலை செய்யும் பிரியதர்ஷினியின் தாய் - தந்தை இருவரும் கடந்த திங்கள்கிழமை  வழக்கம்போல் பிரியதர்ஷினியை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி விளையாட்டு மைதானத்தில் வாந்தி எடுத்துள்ளார். அங்கே இருந்த ஆசிரியர்கள் உடனடியாக பிரியதர்ஷினி அழைத்து அவரது வீட்டிற்கு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் அவரது உறவினரான தாய் மாமனிடம் பிரியதர்ஷினி ஒப்படைத்துவிட்டு வந்துள்ளனர். 

இதையடுத்து, உடல்நிலை சரி இல்லாத பிரியதர்ஷினியை அவரது உறவினர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். உடல்நிலையை சரி பார்த்த மருத்துவர் உடனடியாக கடலூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்குள் பிரியதர்ஷினி உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக பிரியதர்ஷினியை அருகிலுள்ள அறுபடை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர். தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை, பிரியதர்ஷினி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுள்ளார்.  கடந்த 2 நாட்களாக சிகிச்சை நடந்து கொண்டிருந்த நிலையில், பிரியதர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து ரெட்டி சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தான் இதற்கு காரணம் என்ன குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால் பள்ளிக்கல்வித்துறை இரண்டு ஆசிரியர்களை பணியிடம் மாற்றம் செய்துள்ளது. 

 

 

 

 

 

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: