Cuddalore Child Rape Case : கடலூரில் 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக காத்திருந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பழனிசாமி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பழனிசாமி கட்டிட வேல செய்வதற்காக சிறுமியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பழனிச்சாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது.
அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயி ரம் அபராதமும், மற்றொரு பிரி வின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்தார்.
பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Cuddalore child rape case rapist gets 50 years imprisonment
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி