கடலூர் சிப்காட் விபத்து சம்பவம்: 2 அதிகாரிகள் பணிநீக்கம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு விபத்து தொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, 2 சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு விபத்து தொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, 2 சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
cuddalore chipkot

கடலூர் சிப்காட் விபத்து சம்பவம்: 2 அதிகாரிகள் பணிநீக்கம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு விபத்து தொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, 2 சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

விபத்து மற்றும் விசாரணை

கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ரசாயனத் தொழிற்சாலையில், ரசாயனம் செல்லும் குழாயில் இருந்த 'கேஸ்கட்' வெடித்ததால் ரசாயனப் புகை வெளியானது. இதனால், தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாததும், கள ஆய்வுகளில் கவனக்குறைவாக செயல்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி ஆகியோரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அரசு உத்தரவு


இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்தவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சரவணகுமார், கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திர பாலாஜி, மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: