/indian-express-tamil/media/media_files/4XuOuzcr9XEU4vZ7c6DF.jpeg)
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா; அன்னதானத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்த இஸ்லாமியர்
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் வள்ளலார் தைப்பூச திருவிழாவில் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு அன்னதானம் செய்வதற்காக பத்து டன் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இஸ்லாமியர் ஒருவர் வழங்கினார்.
வடலூர் சத்திய ஞான சபையில் நாளை (வியாழக்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி சத்தி ஞான சபைக்கு காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் எஸ்.கே.பி காய்கறி கடை உரிமையாளரும், சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவருமான பக்கிரான் தலைமை தாங்கினார்.
பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு பக்கிரான் அனுப்பி வைத்தார். கடந்த 20 ஆண்டு காலமாக இஸ்லாமியரான பகிரான் வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழாவிற்கு அன்னதானத்திற்காக தொடர்ந்து காய்கறிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் சரக்கு வாகனத்தில் பக்கிரான் அனுப்பி வைத்தார்.
பாபு ராஜேந்திரன், கடலூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.