கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 87 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும்1116 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு
காலை 8.30 மணிக்கு 05.05.2025 மழைப்பொழிவுத் தரவை (மிமீயில்) விருத்தாசலம் - 87.0 2. மீ-மாத்தூர் - 87.0 3. குப்பநத்தம் - 72.8 4. பரங்கிப்பேட்டை - 72.2 வேப்பூர் - 75.0 6. சேத்தியாதோப் - 65.4 7. லால்பேட்டை - 62.0 8. சிதம்பரம் - 54.5 9. காட்டுமயிலூர் - 50.0 10. அண்ணாமலைநகர் - 46.4 11. கே.எம்.கோயில் - 45.0 12. புவனகிரி - 44.0 13. SRC குடிதாங்கி - 42.5 14. பெல்லாந்துறை - 42.4 15. கடலூர் - 40.6 16. ஆட்சியர் அலுவலகம் - 38.2 17. வானமாதேவி - 34.0 18. குறிஞ்சிப்பாடி - 33.0 19. கொத்தவாச்சேரி - 32.0 20. ஸ்ரீமுஷ்ணம் - 28.2 21. லக்கூர் - 19.2 22. வடக்குத்து - 16.0 23. தொழுதூர் - 13.0 24. பண்ருட்டி - 9.0 25. கீழ்செருவாய் - 7.4 மொத்தம் - 1116.80 மிமீ சராசரி - 44.67 மிமீ
செய்தி: பாபு ராஜேந்திரன்.