/indian-express-tamil/media/media_files/RNLVwfBSwTGZEpkOdHwF.jpeg)
தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து படுகாமடைந்த மாணவன் மூளை சாவு அடைந்த நிலையில், மாணவனின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் கொடுக்க முன்வந்துள்ளனர்.
வடலூர் தர்ம சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (35). இவர் நெய்வேலி உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் வயது (15);. இவர் வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் (சீயோன் மெட்ரிக்) பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கிஷோர் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வந்தது. அப்போது மாலை 5.30 மணியளவில் ஈட்டி எறிதல் பயிற்சியின் போது அங்கு நின்ற கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்தது. படுகாயம் அடைந்த மாணவன் கிஷோர், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனை சேர்க்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அங்கு டாக்டர்கள் மாணவன் மூளை சாவு அடைந்ததாக கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த தாயார் சிவகாமி நேற்று காலை ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இந்தவர்கள் காப்பாற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இந்தநிலையில், மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் விளையாட்டு பயிற்சியின் காயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபு ராஜேந்திரன், கடலூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.