10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்; அரசு மாதிரி பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கடலூரில் 10 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட அரசு மாதிரி பள்ளி ஆசிரியர்; போக்சோவில் கைது செய்து காவல்துறை நடவடிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
teacher abuse

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

Advertisment

இப்பள்ளியில் கடலூர் வண்டிப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஞானபழனி (56) என்பவர் 10 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரிடம் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் ஞானபழனி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கடந்த 14 ஆம் தேதி மாணவிகள் தலைமை ஆசிரியர் முருகன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்தார்கள். அதன்பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கடலூர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அரசு மாதிரி பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் ஞானபழனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.

Pocso Act Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: