கடலூர் பள்ளி வேன் விபத்து: ரயில்வே கேட் கீப்பர் கைது; 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இந்த விபத்து தொடர்பாக, ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக, ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
gate keeper arrest

கடலூர் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக, ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

செவ்வாய்க்கிழமை (08.07.2025) காலை, சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஒரு தனியார் பள்ளி வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில், பள்ளி வேனில் பயணித்த 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி உட்பட 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் மற்றொரு மாணவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேட் கீப்பர் மீது குற்றச்சாட்டு:

Advertisment
Advertisements

விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே இக்கோர விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனது பணியின்போது தூங்கியதே இந்த விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனையடுத்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பங்கஜ் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பிரிவுகளில் வழக்குப்பதிவு:

கைது செய்யப்பட்ட ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது தற்போது இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பணியில் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து, ரயில்வே பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளையும், பணியாளர்களின் பொறுப்பின்மையின் விளைவுகளையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. 

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: