Advertisment

கடலூரில் பட்டபகலில் நடந்த பயங்கரம்; கடைக்கு உள்ளே உரிமையாளர் வெட்டிப் படுகொலை

கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் சரவண நகர் இணைப்பு சாலை அருகே உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ராஜேந்திர குமார் பட்டப்பகலில் கடைக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
murder shop keeper cuddalore

கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் சரவண நகர் இணைப்பு சாலை அருகே உள்ள எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிவாநகர் சேர்ந்தவர் ராஜேந்திர குமார்  இவர் திருப்பாதிரிப்புலியூர் சரவண நகர் இணைப்பு சாலை ஒரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் ராஜேந்திர குமார் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் வேலை பார்த்த மூன்று இளைஞர்கள் வேலை தொடர்பாக வெளியில் அனுப்பினார். 

Advertisment

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்த ஒருவர் கடைக்கு சென்றார். அப்போது திடீரென்று பதற்றத்துடன் கடையில் இருந்து அலரி அடித்து கொண்டு வெளியில் வந்தார். அப்போது அதே பகுதி சேர்ந்த ஒரு இளைஞர் எதற்காக பதற்றத்துடன் வெளியில்  வந்தார் என விசாரித்த போது ராஜேந்திர குமார் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கடையில் உள்ளார் என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து, அந்த வாலிபர் அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது ராஜேந்திர குமார் இறந்த நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிலையில் இருந்த ராஜேந்திர குமாரை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இறந்த ராஜேந்திர குமார் செல்போன் உள்ளதா? என்பதை பார்த்தபோது அங்கு இல்லை. இத்தகவல் அறிந்த ராஜேந்திரகுமாரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதனை தொடர்ந்து ராஜேந்தர் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisment
Advertisement

இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் சம்பவத்தைப் பார்த்த நபர் ஆகியவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் கிடைப்பதற்கு  20 நிமிடம் முன்பு இவ்வழியாக குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்பன குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுயையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.கடலூரில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment