புதுச்சேரியில் இருந்து மது கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கடலூர் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தால் குண்டர் சட்டம் பாயும் என இன்று நடந்த மதுவிலக்கு கூட்டத்தில் கடலூர் எஸ்பி தெரிவித்தார்.

புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தால் குண்டர் சட்டம் பாயும் என இன்று நடந்த மதுவிலக்கு கூட்டத்தில் கடலூர் எஸ்பி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
cuddalore sp

புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தால் குண்டர் சட்டம் பாயும் என இன்று நடந்த மதுவிலக்கு கூட்டத்தில் கடலூர் எஸ்பி தெரிவித்தார்.

புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தால் குண்டர் சட்டம்  பாயும் என இன்று நடந்த மதுவிலக்கு  கூட்டத்தில்  கடலூர் எஸ்பி தெரிவித்தார்.
Advertisment
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
Advertisment
Advertisements
மதுபானம் கடத்துவோர், விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய வேண்டும், மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனங்களை முறையாக சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் .
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல்பிரிவு) பார்த்திபன் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்

 

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: