/tamil-ie/media/media_files/uploads/2022/11/Chennai-Metro-1-1.jpg)
15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து கட்டுமானம் மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கான டெண்டர்களைத் தொடங்கி, கையகப்படுத்துவதற்கான நிலத்தை அடையாளம் காணத் தொடங்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) தெரிவித்துள்ளது.
4,080 கோடி மதிப்பீட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, தமிழக அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்கள்.
மெட்ரோ ரயில் கட்டுமானப்பணியின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பின்னர் திருத்தப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசின் முதன்மையான திட்டமாகும்.
தமிழக அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகு, மெட்ரோ ரயில்கான கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான கட்டம்-1 மெட்ரோ நடைபாதையின் விரிவாக்கம், 15.5 கிலோமீட்டர் உயரம் கொண்ட பாதை, 12 நிலையங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பாதை தம்பரத்திற்கும் மற்றும் பல தெற்கு புறநகர் பகுதிகளுக்கும் செல்லும் படி தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், CMRL மாநில நெடுஞ்சாலைய துறையுடன் கலந்துரையாடியபோது, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இரும்புலியூர் வரை உயர்த்தப்பட்ட தாழ்வார பாதையை கட்ட திட்டமிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.