scorecardresearch

ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வெளிநாட்டு தங்கம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

AIU seizes 3.3kg of Gold in Coimbatore
AIU seizes 3.3kg of Gold in Coimbatore

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை அழைத்து தீவிர சோதனை செய்தபோது, பேண்ட் பாக்கெட்டுகள், உள்ளாடைகளில் மறைத்து வைத்து 3.03 கிலோ எடை உள்ள சுமார் ரூபாய் 1.9 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன், சென்னையை சேர்ந்த சேக் முகமது என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து உளவுத்துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Customes aiu seizes 3 3kg of gold in coimbatore

Best of Express