/tamil-ie/media/media_files/uploads/2019/10/arrested.jpg)
ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 29 இளைஞர்கள் பிடிபட்டனர்.
Customs recruitment exam cheating: சென்னை சுங்கத்துறை நடத்திய ஆள்சேர்ப்பு தேர்வில் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி ஏமாற்றிய ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 29 இளைஞர்கள் பிடிபட்டனர்.
மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் (CBEC) எழுத்தர்கள், கேண்டீன் உதவியாளர்கள் மற்றும் கார் ஓட்டுநர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சென்னையில் மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 15,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,600 பேர் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னை சுங்கச் சாவடியில் ஒரு சில தேர்வர்கள் சனிக்கிழமை (அக்.14) தேர்வெழுதினர்.
இது குறித்து, காவல்துறை இணை ஆணையர் அபிஷேக் தீட்சித், “தேர்வில் புளூடூத் மற்றும் போர்டு பேண்ட் கருவிகளைப் பயன்படுத்தியதைக் கண்டறிந்த 29 இளைஞர்களை நாங்கள் கைது செய்துள்ளோம்.
சுங்கத்துறை அதிகாரிகள் புகாரின் அடிப்படையில், நாங்கள் விண்ணப்பதாரர்களை பாதுகாத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு விண்ணப்பதாரர் நடந்துகொண்டதைக் கண்டதாகவும், அவர் காதில் புளூடூத் கருவி மற்றும் இடுப்பில் ஒரு பிராட்பேண்ட் கருவியை மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு உதவி செய்பவரைக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.