/indian-express-tamil/media/media_files/uz7abiXNV3CybOexwmSu.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னையில் 14 பேருக்கும், திருவாரூரில் 3 பேருக்கும், செங்கல்பட்டில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் , என 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று 8 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம்டைந்து 8 பேர் வீடு திரும்பினர். 104 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.