Advertisment

சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு சவால்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி

author-image
WebDesk
New Update
CBE MEE

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

Advertisment

முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை என விரிவான மருத்துவ முகமாக நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, காவலர்களின் உடல் நல ஆரோக்கியம் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெறுவதாகவும் கூறினார்.  

CB M

மேலும் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்த போவதாக கூறினார். குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில் நுட்ப ரீதியாக  ஒரு சவால் தான் எனவும் சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டு வருவதாகவும் அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரனை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன் சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment