Cyclone Fengal: தாமதமான புயல்; கரையை கடக்கும் புதிய தேதி அறிவிப்பு; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
puyal

புயல் கரையை கடக்கும் தேதி அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஃபீஞ்சல் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.30 ஆம் தேதி காலை கரையை கடக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 370 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இது ஃபீஞ்சல் புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்பதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளதால்  அடுத்த, 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் புயலாக மாறிய பின் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஃபீஞ்சல் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.30 ஆம் தேதி காலை கரையை கடக்கும் போது, மணிக்கு 50 முதல் 70 கி.மீ., வேகம் வரை காற்று வீசலாம் என்றும் கணித்துள்ளது.

Advertisment
Advertisements

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (நவ.,28) கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்ச் அலர்ட்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cyclone Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: