/tamil-ie/media/media_files/uploads/2018/11/1647.jpg)
கஜ புயல் சிறப்பு புகைப்படத் தொகுப்பு : தமிழகத்தில் நேற்று நள்ளிரவு பாம்பன் மற்றும் கடலூருக்கு இடையே நாகை மாவட்டத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது கஜ புயல். நாகை மாவட்டத்தில் பல்வேறு சேதங்கள் உருவாகியுள்ளன.
கஜ புயல் சிறப்பு புகைப்படத் தொகுப்பு
நாகை மட்டுமல்லாமல் தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் தடை பெற்றுள்ளது. பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் தமிழக அரசு துரித கதியில் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் தங்களின் பாராட்டுகளை பதிவு செய்துள்ளனர். மேலும் தங்கள் கட்சி அமைப்பில் இருப்பவர்கள் மீட்புக் குழுவோடு இணைந்து பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : கஜ புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us