வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரெலியாக தமிழகத்தின் 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பயணம் செய்யும் பயணிகள், புயலால் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் ரயில் தாமதமாகும் அறிவிப்புகளை உடனடியாக தெரிந்துகொள்ள இந்த சேவை மையங்கள் உதவும்.
இந்நிலையில் பயணிகள் இதை பயன்படுத்திகொள்ளவும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிப்பட்டுள்ளது.