Advertisment

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை... எந்தெந்த மாநிலங்களுக்கு ஆபத்து?

மைச்சாங் புயல் தாக்குதலுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone

'மைச்சாங்' புயல் எச்சரிக்கை

வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மைச்சாங்'  என்ற புயலாக மாறி வலுப்பெற்று வருவதால் சென்னையைத் தாண்டி ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே நாளை மறுநாள் (டிசம்பர் 05) காலை மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் வலுப்பெற்று புயலாக மாறி, அதன்பிறகு, டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு-மத்திய வங்கக்கடலை நெருங்கும் என்றும் எதிர்பார்கக்ப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வருடன் பிரதர் மோடி பேச்சு

மைச்சாங் சூறாவளியின் தாக்குதலுக்கு முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில்,  இந்த புயல் பாதுகாப்பிற்காக அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  புதுச்சேரி மற்றும், பிற மாநில அரசுகள் தங்களது பேரிடர் மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே புயலால் பாதிக்கப்படக்கூடிய தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 3 முதல் 6-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள 118 ரயில்கள், மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட தூர ரயில்கள் உட்பட தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் நிர்வாக இயக்குநர் சுனந்தா கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2,ந் அன்று அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.  

இந்த புயல் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கி.மீ., சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 450 கி.மீ., நெல்லூருக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ., பாபட்லாவில் இருந்து 670 கி.மீ. தென்-தென்கிழக்கே, தென்கிழக்கில் 670 கி.மீ. மச்சிலிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காற்று வீசும் என்றும், இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின், வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலை அடையும் என்றும் டிசம்பர் 4 அதிகாலைக்குள் புயல் கரையை கரையை கடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு துணை இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்கிறது, இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் காற்று வீச வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரையின் மேற்கு-மத்திய வளைகுடாவை அடையும். பின்னர் அது வடக்கு திசையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 6-ம் தேதி வரை கனமழை நீடிக்கும்.ஒடிசாவிலும் டிசம்பர் 6-ம் தேதி வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மைச்சாங் புயல் காரணமாக மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியுள்ளது.

மேலும் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நிவாரண மையங்கள் அல்லது வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்குள் கரைக்குத் திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே மைச்சாங் புயல் தீவிரமடைந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், காவல் நிலையங்கள், தீயணைப்பு சேவை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், தண்ணீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கடைகள், மின்சாரம், போக்குவரத்து, எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.

தமிழக மூத்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்

புயல் அறிவிப்பு குறித்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னையின் அண்டை மாவட்டங்களில் அதிகாரிகளுடன் மூத்த அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். இந்த இடங்களில்தான் அதிக அளவு மழை பெய்து சூறாவளி கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண மையங்களுக்கு மாற்றுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 121 பல்நோக்கு மையங்களும், 4,967 நிவாரண மையங்களும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 714 பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cyclone tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment