/indian-express-tamil/media/media_files/2025/10/24/cyclone-2025-10-24-13-47-40.jpg)
கடந்த 22-ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (அக். 23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து வட தமிழக உட் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், வங்கக்கடலில் வரும் 27-ஆம் தேதி மோன்தா புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூர், சென்னை மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி தவிர மற்ற பகுதிகளில் அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை) வரை கனமழை தொடரக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, வெள்ளியன்று ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us