Advertisment

பிரதமர் உடன் ரகசிய சந்திப்பு; கேள்விகளை அடுக்கிய டி.ஜெயக்குமார்

“பிரதமர் நரேந்திர மோடியை தி.மு.க. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரகசியமாக சந்தித்தது ஏன்? திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இரகசிய உறவு உள்ளது” என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.

author-image
WebDesk
New Update
former minister jayakumar

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரகசியமாக சந்தித்தது ஏன் என டி. ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் நரேந்திர மோடி 2024 பிப்.27ஆம் தேதி இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தச் சந்திப்பு குறித்து உறுதியான செய்திகள் வெளியாகவில்லை.

Advertisment

இதற்கிடையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதும், இந்தச் சந்திப்பு 15 நிமிடங்கள் நடந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சரும். அ.தி.மு.க. பொருளாளருமான டி. ஜெயக்குமார், “திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இரகசியமாக உறவு உள்ளது. நாங்கள் அடிப்பது போல் அடிப்போம் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடிப்பதுபோல் அடியுங்கள் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்பது போல் அவர்களின் நடத்தை உள்ளது.

நாங்கள் இதுவரை இப்படியொரு இரகசிய சந்திப்பு நடத்தவில்லை. வெளிப்படையாகதான் சந்தித்துள்ளோம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

D Jayakumar Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment