Advertisment

சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்; ஜெயக்குமார் பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் கஞ்சா பயன்படுத்திய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
canobi x

சென்னை மெட்ரோ ரயிலில் வெளிப்படையாக கஞ்சா பயன்படுத்துவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் கஞ்சா பயன்படுத்திய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், பதிவிட்டிருப்பதாவது:

“பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் வெளிப்படையாக கஞ்சா பயன்படுத்துவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

D Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment