தமிழகத்தில் ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths, கொரோனா வைரஸ், தமிழ்நாடு, தமிழகத்தில் இன்று 5956 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனா பாதிப்பல் 91 பேர் பலி, tn coronavirus deaths, today tamil nadu 5956 covid-19 positive, today covid-19 deaths 91, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7000ஐ தாண்டியது, latest tamil nadu coronavirus report, latest coronavirus news

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 91 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழகத்தில் மொத்தம் உள்ள 150 பரிசோதனை மையங்களில் இன்று 75,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 48 லட்சத்து 13 ஆயிரத்து 147 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 73,097 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 46 லட்சத்து 52 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 91 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,008 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52,578 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் - 589 பேருக்கும், சேலம் - 497, செங்கல்பட்டு - 347, கடலூர் - 307, திருவள்ளூர் - 299, திருவண்ணாமலை - 140, கடலூர் - 390, தேனி - 171, காஞ்சிபுரம் - 187, திண்டுக்கல் - 129 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,150பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,806 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி தொற்று 1,100 - 1,300க்குள் ஒரு நிலையாக பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Salem

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: