Advertisment

சிறையில் நோட்டீஸ்: சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்ய அரசு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் அரசியல் விமர்சகராக அறியப்பட்ட சவுக்கு சங்கர், தமிழக அரசின் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தவர்.

author-image
WebDesk
New Update
Madurai HC Bench Registers contempt proceedings against Savukku Shankar

Justice GR Swaminathan of the MadrasHighCourt Madurai Bench has directed the Registry of the Court to initiate suo motu contempt proceedings against Savukku Shankar Tamil News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் அரசியல் விமர்சகராக அறியப்பட்ட சவுக்கு சங்கர், தமிழக அரசின் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தவர். கடந்த 2008-ம் ஆண்டு அரசின் ஆவணங்களை கசிய விட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே அரசு பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட் சவுக்கு சங்கர் சவுக்கு ஆன்லைன் என்ற இணையதளத்தை தொடங்கி அரசின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

இந்த பேட்டியிலும் அரசு மற்றும் நிதித்துறைக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்த சவுக்கு சங்கர், நீதிமன்றங்கள் குறித்து பேசிய கருத்து வைரலாக பரவியது. இதனால் அவர் மீது நீதிமனற் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்து.

இதனைத் தொடர்ந்து முதலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையெ லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு மாதம் ரூ40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளதால், அவருக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தி அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றம் முதுரை கிளை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கடலூர் மத்திய சிறைக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சவுக்கு சங்கருக்கு பணி நீக்கத்திற்கான ஷோகேஸ் நோட்டீசை வழங்கியது. ஆனால் சவுக்கு சங்கர் அதை வாங்க மறுத்துவிட்ட நிலையில். அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறை வாசலில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment