Advertisment

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; உயிரிழப்பு 63 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் 6 பெண்கள் உள்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
kallachara.jpg

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில்  கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 38 பேர் அடுத்தடுத்த தினங்களில் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானர்களின் எண்ணிக்கை இன்று 63 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 பேர் பெண்கள். ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் வீடு திரும்பினர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kallakurichi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment