Advertisment

பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது மாநிலம் முழுவதும் 60 வழக்குகள் பதிவு

பெரியாா் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகள் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Seeman

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, திராவிடர் கழகம், தி.வி.க, த.பெ.தி.க அமைப்புகள் சாா்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த புதன்கிழமை கடலூா் மாவட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை கடுமையாக விமா்சித்து செய்தியாளர்களிடம் பேசினார். பெரியார் மீதான அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சட்டத் துறை இணைச் செயலா் மருதுகணேஷ் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகாா் மனு அளித்தாா்.

Advertisment

சீமானின் அவதூறு பேச்சைக் கண்டித்தும், பெரியார் பேசியதாக சீமான் கூறியதற்கு ஆதாரம் கேட்டு கு. ராமகிருஷ்ணன் மற்றும் தி.க, தி.மு.க, தி.வி.க, த.பெ.தி.க உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, திராவிடர் கழகம், தி.வி.க,  த.பெ.தி.க அமைப்புகள் சாா்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், தமிழக காவல் துறை சீமான் மீது வழக்கு பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி,  வெள்ளிக்கிழமை மாலை வரை தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து, அவா் மீது எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணா்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

Advertisment
Advertisement

இந்நிலையில், மதுரை கே.கே.நகரைச் சோ்ந்த ரமேஷ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், பெரியாா் மீது சீமான் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட- ஒழுங்கு பிரச்னைகள் எழுந்துள்ளன.

எனவே, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனது புகாரின் அடிப்படையில் சீமான் மீது மதுரை அண்ணாநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூகத்தின் முன்னேற்றத்துக்காக குறிப்பாக பெண்கள் உரிமை, பெண் கல்விக்கு பாடுபட்ட பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி நிர்மல் குமார், சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மதுரை அண்ணாநகா் காவல் நிலைய போலீஸாா், மனுதாரரின் புகாா் மனுவைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 20-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment