/tamil-ie/media/media_files/uploads/2022/03/TR-Balau-Maj.jpg)
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கடசியாக திமுக சார்பில் டெல்லியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகம், டெல்லியில் உள்ள தீன் தயால் உபார்த்தியாயா மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அலுவலகத்தின் திறப்பு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி வரும் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லியில் திமுக அலுவலகம் திறக்கப்பட் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் ஏப்ரல் 2-ந் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு திமுக சார்பில் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாஜக முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமாக அமித்ஷா மற்றும் தொழில்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை நேரில் சந்தித்த டிஆர் பாலு திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக அழைப்பதழை வழங்கியுள்ளார். இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த எம்பி டிஆர் பாலு மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் அவருக்கு திமுக அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.