Advertisment

பதில் இல்லையா... நாளை பதிலுடன் வாருங்கள்: செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில்பாலாஜி தொடர்பான, விபரங்கள் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

author-image
WebDesk
New Update
Supreme Court issues notice to ED on bail plea of Senthil Balaji in PMLA case Tamil News

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு அமலாக்கத்துறை சார்பில் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில், இன்று பதில் இல்லை என்றால் நாளை பதிலோடு வாருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, தனது பதவியை பயன்படுத்தி- போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இது தொடர்பான அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோதமான பணப்பறிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரின் காவல் நாட்கள் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் செந்தில் பாலாஜி தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து வந்தார். அந்த வகையில் அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

உச்சநீதிமன்றம் நீதிபதிகள், அபய் எஸ் ஓஹோ அமர்வில் நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் ரூ67 கோடி பணப்பரிவர்த்தனை நடந்ததற்காக ஆதாரங்கள் எங்கே என்று கேட்டபோது, செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தான் ஆதாரம் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்கு பதில் அளித்த செந்தில்பாலாஜி தரப்பு, பென் டிரைவ் கைப்பற்றியதில் தனது பங்களிப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த பதிலை ஏற்ற முடியாது என்று அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை கேட்டறிந்த நீதிபதிகள், நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில்பாலாஜி தொடர்பான, விபரங்கள் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுவிட்டு எங்களது இந்த கேள்விக்கு, பதில் அளிக்காமலே இருக்கிறீர்கள். நாங்க்ள கேட்டது சாதாரண கேள்வி. சுற்றிவளைக்காமல் பதில் சொல்ல வேண்டும். நாங்க்ள கேள்வி கேட்டால் வழக்கறிர்கள் அதை தனிப்பட்ட விரோதமாக எடுத்தக்கொள்கிறார்கள். பென் டிரைவில் இருப்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்கள் தான் பதில் கொடுக்க வேண்டும் என்பதை நாங்களும் அறிவோம்.

தடயவியல் நிபுணர்கள் கொடுக்கும் பதிலைத்தான் நாங்கள் கேட்கிறோம். இன்று பதில் இல்லை என்றால் நாளை பதிலோடு வாருங்கள். என்று கூறி நாளை (ஜூலை 25) வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

senthil balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment