வடகிழக்கு பருவமழை: நவம்பர், டிசம்பரில் புயல்கள் உருவாகும்; இந்த மாவட்டங்களில் அதிக மழை - டெல்டா வெதர்மேன்

நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை முன்கணிப்பில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை முன்கணிப்பில் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rain monsoon

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள வானிலை முன்கணிப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% முதல் 35% வரை அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

Advertisment

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள வானிலை முன்கணிப்பு தகவலில் கூறியுள்ளதை இங்கே தருகிறோம்.

அதிக மழைக்கான காரணங்கள்:

இந்த ஆண்டு லாநினா (La Nina) மற்றும் எதிர்மறை ஐ.ஓ.டி. (Negative I.O.D) நிகழ்வுகள் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக இருக்கும்.

கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் நிலவும் அலைவுகள், தமிழகத்தை நோக்கி மழை நிகழ்வுகளை நகர்த்தும்.

Advertisment
Advertisements

வெப்பமண்டல காற்று குவிதல் (Tropical wind convergence) இந்த ஆண்டு தமிழகம் மற்றும் இலங்கை அட்சரேகைகளுக்கு அருகில் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

கடந்த கால மழை அளவு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் 44 செ.மீ. மழை பெறும். கடந்த 2018-ஐத் தவிர மற்ற ஆண்டுகளில் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாகவே பதிவாகியுள்ளது. உதாரணமாக, 2021-ல் 71.4 செ.மீ. மழை பெய்தது.

புயல்கள் மற்றும் மழைப்பொழிவு:

நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

இந்த புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இந்த ஆண்டு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிப்பதற்கும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் இயல்புக்கு அதிகமான மழை பதிவாவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்த பருவமழைக் காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளாகும். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Northeast Monsoon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: