/tamil-ie/media/media_files/uploads/2023/04/Theater.jpg)
தமிழ்நாட்டில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மாநில அரசுக்கு கோரிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த கோரிக்கையில், “மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஏ.சி. திரையரங்குகளுக்கு ரூ.200ம், ஏசி வசதி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.