Advertisment

2-வது முறையும் ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்தால் ஜனநாயகம் தோல்வி அடையும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

தமிழக அரசின் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஆளுநர் ஆர்.என். ரவியின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi High Court

அரசு ஒரு மசோதாவை 2-வது முறையாக தாக்கல் செய்த பிறகும், அந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்க, ஆளுனர் காலம் தாழ்த்தினால், அது முழ ஜனநாயக அமைப்பின் தோல்விக்க வழிவகுக்கும் என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிம்னறத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Read In English: Democracy fails if Gov refuses assent to Bill 2nd time, Tamil Nadu tells SC

தமிழ்நாட்டில், ஆளுனராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அவர் அரசை பற்றி விமர்சிப்பதும், முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் ஆளுனர் குறித்து விமர்சனங்களை வைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு இடையே நடைபெறும் வார்த்தைப்போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, அனுமதி அளிக்க ஆளுனர் காலம் தாழ்த்தி வருகிறார் என்று அரசின் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இதில் சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

Advertisment
Advertisement

அப்போது தமிழக அரசின் சார்பில்,ஒரு மாநிலத்தின் அரசு 2-வது முறையாக தாக்கல் செய்யப்படும் மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை, அவ்வாறு அவர் செய்யத் தவறினால் அது முழு ஜனநாயக அமைப்பின் தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது, இந்த விசாரணையின் போது, நீதிபதி பரித்வாலா, "மக்கள் துன்பப்படுகிறார்கள், மாநிலம் துன்பப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "சட்டத்தின் கீழ், மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றினால், ஆளுநர் அதை மறுபரிசீலனை செய்யக் கோரலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம், (அவர்) மறுபரிசீலனை கேட்கலாம். மறுபரிசீலனைக்குப் பிறகு, அதே மசோதா மீண்டும் இயற்றப்பட்டால், அல்லது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டால், அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஆளுநருக்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை, ஏனெனில் இது நமது அரசியலமைப்பு கட்டமைப்பு. அவர் அவ்வாறு செய்யாவிட்டால், ஜனநாயகத்தின் முழு அமைப்பும் தோல்வியடையும் என்று தெரிவித்துள்ளளர்.

மேலும், சட்டமன்றம் மக்களின் கோரிக்கைகளை அறிந்து சட்டங்களை இயற்றுகிறது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அந்தச் சட்டங்களுக்கு மேலாதிக்கம் உண்டு. முதல் சுற்றில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், இரண்டாவது சுற்றில் அவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. இதில் உயர் நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உள்ளது" என்று ரோஹத்கி சில ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

இதனிடையே, மாநில சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் இயற்றப்படும் சூழ்நிலையைக் குறிப்பிட்ட நீதிபதி பர்திவாலா, ஆளுநரின் திருப்திக்காக அல்ல, பின்னர் என்ன நடக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. முழு மசோதாவும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அவர் கூறினால் அல்லது சில பகுதிகளுக்கு மறுஆய்வு தேவை என்று அவர் கூறினால் அது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும்.

அந்தச் செய்திக்குப் பிறகு சட்டசபை அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டு சட்டத்தைத் திருத்துகிறது அல்லது அதன் முடிவின்படி செல்கிறது. இல்லையெனில், இந்த நாட்டில் ஜனநாயக அமைப்பு தோல்வியடையும். ஒருபுறம், கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர், மறுபுறம், தங்கள் வேலையைச் செய்யும் பிரதிநிதிகள் உள்ளனர். "ஒரு நபர், அதன் பதவி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவர் அரசியலமைப்பின் படி செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, ஜனாதிபதியிடம் பரிந்துரைப்பது முதல் சந்தர்ப்பத்திலேயே செய்யப்பட வேண்டும் என்று கூறினார். இது ஆளுநர் வெறுமனே "எதுவும் செய்யவில்லை" என்ற வழக்கு என்ற வழக்கு தான். ஆளுநர் தனது ஒப்புதலை நிறுத்தி, பிரிவு 200 இன் முதல் பகுதியின்படி சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம். அவர் அவ்வாறு செய்தால், மாநில சட்டமன்றம் அதை மறுபரிசீலனை செய்து திருப்பி அனுப்பினால், அவருக்கு "ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கட்டத்திற்குப் பிறகு, ஆளுநர் இனி மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒதுக்க முடியாது.

இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. அவர் தனக்கென ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார். அது ஒரு சட்டவிரோத வாதத்தைத் தவிர வேறில்லை என்று கூறியுள்ளார். வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை, பிப்ரவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்,

Delhi High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment