/tamil-ie/media/media_files/uploads/2023/08/fe-mosquito-49141_1280.jpg)
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் குறைந்து பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளது. மழை பெய்யத் தொடங்கியதால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. அதே நேரம் சட்டென வானிலை மாறியதால் பருவ நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நோய் தடுப்பு மையங்களை அமைத்து டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பொது சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிவிப்பில், ”பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தேவையான ரத்தத் தட்டணுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் போன்றவை போதுமான அளவு கையிருப்பு இருப்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.