துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள பிரபல எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் இன்று காலை திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனால், அதிமுக வட்டாரங்களிலும் மருத்துவமனைப் பகுதியிலும் பரபரப்பாக காணப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடல்நிலை பற்றி விசாரிப்புகள் எழுந்த நிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடல் நலத்துடன் உள்ளார் என்று அறிக்கை வெளியிட்டது. மேலும், அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார் என்று தெரிவித்தது.
இதனிடையே, எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"