New Update
/indian-express-tamil/media/media_files/9e4lWopaUEkf1aeVLIWs.jpg)
எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது- கொளத்தூரில் ஸ்டாலின் பேட்டி
சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.5) ஆய்வு செய்து பார்வையிட்டார். கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப் பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. சென்னையில் எங்கு மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுகிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “இது தொடர்பான கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை” என நச் பதிலளித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.