புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேர்... இந்த தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை: சட்டசபையில் உதயநிதி உறுதி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது இருந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது இருந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
makalir

தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகையின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு பல விதிகளை தி.மு.க அரசு அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதலான மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் எப்போது பரிசீலனை செய்யப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் பேசியதாவது, "தகுதியான மகளிருக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டு மகளிர் பொருளாதார தன்னிகருக்கு என்றும் நமது தி.மு.க அரசு துணை நிற்கும். ஒட்டு மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பேரரிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

மகளிரின் பொருளாதார விடுதலைக்கு துணை நிற்கும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதம் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 26 மாதங்களாக தமிழ்நாட்டு மகளிருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.26,000 நமது அரசு கொடுத்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி ரூபாய் உரிமைத் தொகைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடைய வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் சில விதிகளை தளர்த்தினார். மக்களை தேடி அரசு சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. 

இந்த முகாமின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. நவம்பர் 15-ஆம் தேதி வரை 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதுவரை 9 ஆயிரத்து 55 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 28 லட்சம் மக்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். புதிய உரிமைத் தொகை கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 30-ஆம் தேதி முடிவடையும். முகாம்கள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்றார்.

Advertisment
Advertisements
Tamilnadu Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: