துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டுள்ளதால், அவரது அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாள்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் உடல்நலம் தேறி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்த புதிய தேதிகள், உதயநிதி ஸ்டாலின் முழுமையாக குணமடைந்த பிறகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.