Advertisment

எஸ்.பி வேலுமணியை தவறாக சித்தரித்து போஸ்டர்: நள்ளிரவில் சொந்த ஊரில் பரபரப்பு

கோவை குனியமுத்தூர் பகுதியில் எஸ்.பி. வேலுமணி பற்றி தவறாக சித்தரித்து போஸ்டர் ஓட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் காவல் நிலையம் முன்பு திரண்ட அ.தி.மு.கவினர் இதுகுறித்து புகார்.

author-image
WebDesk
New Update
கேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று  நோட்டீஸ் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  கூறி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் இல்லம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில்  மூன்று இடங்களில் எஸ்.பி. வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளது. 

Spcbe.jpg

அதன் புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதனை பார்த்த அதிமுகவினர்  குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு சுவரொட்டி ஒட்டிய நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Coimbatore
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment