/indian-express-tamil/media/media_files/tE03VTvlMhuuEPJ6GJ7A.jpg)
பணத்தகராறு , சொத்துத்தகராறு உள்ளிட்ட சிவில் பிரச்சனைகளில் கால்வதுறையினர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று டி.ஜி.பி அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக ஏ.டி.ஜி.பி அருண் கூறியதாவது: எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையை நடத்தக்கூடாது. பணத்தகராறு , சொத்துத் தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவரங்களில் காவல்துறையினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
சிவில் விவரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்பி மற்றும் காவல் ஆணையாளர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும். மேலும் எழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.