தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மரணத்திற்கு முன்பு மாணவி அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 10ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். தீபாவளி பண்டிகையின் விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்த மாணவியை அவரது வீட்டின் அருகே இருந்த 2 இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வன்கொடுமையாலும், பல காயத்தினாலும் மாணவி பலியானார்.
கடந்த 5-ந்தேதி அன்று கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. மாணவியின் வீட்டில் வாகன வசதி எதுவும் இல்லாததாலும் இரவு 7 மணி அளவிலேயே தாய்-தந்தை வந்ததாலும் உடனடியாக அவர்களால் புகார் அளிக்க முடியவில்லை. இதனால் மறுநாள் காலையில் சென்றே புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் தனக்கு இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என்று மாணவி விவரித்துள்ளார். அதில்,
தர்மபுரி பாலியல் வன்கொடுமையில் மாணவி அளித்த புகார்
நான் 10-ம் வகுப்பு வரை சிட்லிங் கிராமத்தில் படித்து விட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் படித்தேன். இந்தாண்டு அதே பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பிரிவில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தேன். 3-ந் தேதியன்று தீபாவளி விடுமுறைக்காக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு வந்தேன்.
5-ந்தேதி பகல் 2 மணியளவில் என் தாய், தந்தையர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், எங்கள் வீட்டிள் கழிவறை இல்லாத காரணத்தால் நான் மட்டும் அங்குள்ள காட்டுக்கு மலம் கழிக்க சென்றேன்.
அப்போது எங்கள் ஊரை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் சதீஷ், மற்றும் அவருடைய நண்பர் பெருமாள் மகன் ரமேஷ் என்பவரும் பின் தொடர்ந்தனர். நான் காட்டுப்பகுதியில் செடி மறைவில் மலம் கழிக்க முற்பட்ட போது சதீஷ் என் பின்னால் வந்து அவன் கையை வைத்து என் வாயை பொத்தி அவன் ஆடையை அவிழ்த்து என்னை தள்ளி கெடுக்க முயன்றான்.
தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை... பரிதாபமாக பலி
அப்போது ரமேஷ் என்னை பிடித்துக் கொண்டு நான் திமிராத படி சதீசுக்கு உதவி செய்தான். நான் சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். விடுடா, விடுடா என சொல்லி அவனிடமிருந்து திமிறி வீட்டு பக்கம் ஓடி வந்து விட்டேன். வந்த களைப்பால் படுத்து மயங்கி விட்டேன். பின்பு அப்பா அம்மா வீட்டிற்கு வந்த பிறகு இதை சொன்னேன்.” என்று அழுதுக்கொண்டே கூறியுள்ளார்.
இவ்வழக்கில், போலீஸ் மேற்கொண்ட வழக்கில் சதீஷ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றொருவனையும் தேடி வருகின்றனர்.